About Me

My photo
Sri Lanka
சில ஆசைகள்....

Thursday, August 11, 2011

படித்ததில் பிடித்தது……சில கவிவரிகள்.......

தமிழ் கவிதை ..                    படித்ததில் பிடித்தது…………….
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
*********************************************
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
*********************************************
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
*********************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
*********************************************
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…
*********************************************
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..
*********************************************
நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….
*********************************************
அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…
*********************************************
நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…
*********************************************
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
*********************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…
*********************************************
எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….
*********************************************
வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….
*********************************************
மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….
*********************************************
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……