About Me

My photo
Sri Lanka
சில ஆசைகள்....

Sunday, August 7, 2011

கறுப்பு

இருபத்தியெட்டு ஆண்டுகள் இருப்பாகிப்போனதால்
கருவறுத்த கறுப்புயூலை கனவாகிப்போமாமோ?-வரும்கால
பருவத்தே பயிர்செய்ய பைந்தமிழர் மறப்பரோ?
பகைவனுக்கு தன்புள்ளடிஇடுபவன் சுத்ததமிழனோ?

பத்தியுமின்றி பந்தலுயுமின்றி படுக்கையுமின்றிபோனாலும்.....
எம்-புத்தியுமின்றிப் போய்விடுமா?எதிரிக்கு புள்ளடியிட?
கத்திமுனையில் நடந்து கஞ்சிக்கு ஏங்குகின்றபோதிலும்...............
காலத்தால்பட்ட துயரை கற்றபாடத்தை மறுப்பரோ?

சுத்தமாய் தம்நிலையை மறந்தவராய் சுகம்மறந்தவராய்
சித்தப்பிரமை பிடித்தவராய் சிறைவாழ்வு வாழ்ந்தபோதும்
இருபத்தியெட்டுஆண்டு நினைவு காலவந்தால் இடுவரோ
புள்ளடி எதிரியின் சின்னத்திற்கு முன்னே?

நாடுகடந்தும் நம்கொள்ளைமாறாது வாழ்வோரும்
நாட்டினுள் எம்கூட்டமைப்பு குலையாதவரையும்
கூடுகலையாத கொள்கையுடையோர் வாழும்வரை
கேடுஎமக்கில்லை கெடுவோரும் நாமில்லையே!
வாடாது தமிழனாய் வாழ்வினை தலைநிமிர்ந்துவாழ்.

தேடிவருவோர் தரும்வெகுமதிகள் உங்கள்தேவைக்கே
தேசத்ததுரோகிகளின் வார்த்தைகள் யாருக்கு தேவையோ?
ஆடிவரும் அதில்ஆடிவரும் எம்நினைவுகள்.....-ஆடாதஆட்டம்
ஆடிவருவோரை அவருக்கு கரிபூசி ஓடஓடகலையாரோ?
தமிழ் ஆயின் -தலைநிமிர்ந்துவாழ்

நீ இலலாதபோது.....

நீ இல்லாதபோது
பூிகிறது
உன் இருப்பின் அவசியம்.....